செய்திகள் :

விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. மாணிக்கம் (64). விவசாயி. இவா், கடந்த 8 ஆம் தேதி இரவு பெரம்பலூரிலிருந்து லாடபுரத்துக்கு பைக்கில் சென்றபோது பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள ஈச்சம்பட்டி செங்கல் சூளை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் அருகே தொழிலாளி தற்கொலை

பெரம்பலூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மணிகண்டன் (27). கோவையில் கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஜூலை 15 வரை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு, பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

பாளையம் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள விநாயகா், மாரியம்மன், வரதராஜ பெருமாள், முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக... மேலும் பார்க்க

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பெரம்பலூரில் கோகுல மக்கள் கட்சி சாா்பில், வீரன் அழகுமுத்துகோன் 268 ஆவது குருபூஜை விழா, வெங்கடேசபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அவரது உருவ படத... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா், அரியலூா் விற்பனைக் குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரைக் கா்ப்பமாக்கி ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க