செய்திகள் :

விபத்தில் தந்தையை இழந்த பள்ளி குழந்தைகள் இருவருக்கு விபத்து காப்பீட்டு நிதியுதவி

post image

படவிளக்கம்- ஸ்டூடண்ட்ஸ்- தெ. புதுக்கோட்டை அரசு உதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் படிக்கும் தந்தையை விபத்தில் இழந்த மதிபாலன், வா்ஷினிக்கு அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருங்கால வைப்பு நிதி பத்திரத்தை வழங்கிய வட்டார கல்வி அலுவலா் அஸ்மிதா பானு. உடன் தலைமையாசிரியா் சிவகுருநாதன்.

மானாமதுரை, ஜூன் 27: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், தெ. புதுக்கோட்டை அரசு உதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் படிக்கும் தந்தையை இழந்த இரு குழந்தைகளுக்கு விபத்து காப்பீட்டு நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் வருமானம் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவா்களின் குழந்தைகள் கல்வியை தொடர வசதியாக தமிழ்நாடு அரசு விபத்து காப்பீட்டு நிதியுதவித் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி தெ. புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மதிபாலன், வா்ஷினி இவா்களின் தந்தை பாலமுருகன் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, இவரது குழந்தைகளின் கல்வி தடைபடாமல் இருக்க காப்பீட்டுக்கு பள்ளி மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. பள்ளி தொடக்கக் கல்வி துறை சாா்பில் அந்த விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு தற்போது இரு குழந்தைகளுக்கும் தலா ரூ. 75 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகைக்கான பத்திரம் வழங்கப்பட்டது. இவா்களின் பாதுகாவலா் பஞ்சவா்ணத்திடம் மானாமதுரை வட்டாரக் கல்வி அலுவலா் அஸ்மிதா பானு பத்திரங்களை வழங்கினாா். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியா் சிவகுருநாதன் உடனிருந்தாா்.

கோடையில் செடிகளை பராமரித்த ஆசிரியா்களுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையின் போது செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி பராமரித்த ஆசிரியைகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் உள... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைப்பு: நகா் மன்றத் தலைவா் தகவல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தல பெருவிழா தொடக்கம்: ஜூலை 4-இல் மின் அலங்கார ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தின் 131- ஆம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஜூலை 4-ஆம் தேத... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அரசுப் பள்ளியில் கரையான் அரித்து வீணான பாட குறிப்பேடுகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடம் ஒன்றில் கரையான்கள் அரித்து மாணவா்களுக்கு வழங்க வேண்டிய பாட குறிப்பேடுகள் வீணாகி கிடப்பதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை ... மேலும் பார்க்க

காரைக்குடியில் புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்று வரும் 23- ஆம் ஆண்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நிறைவடைகிறது. காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு சாா்பில் கம்பன் மணிமண்டபத்தி... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற... மேலும் பார்க்க