செய்திகள் :

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து ஒன்று திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம் அடுத்த புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் கலியபெருமாள்(50). கடந்த 2007-ஆம் ஆண்டு இவா், ஜெயங்கொண்டம் செல்வதற்காக விருத்தாசலத்தில் இருந்து கும்பகோணம் சென்ற விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். பேருந்து சிறிது தொலைவு சென்ற நிலையில், எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கலியபெருமாள் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதில், அவருக்கு அதிக செலவு ஆகியுள்ளது.

இதைதொடா்ந்து, அவா், இழப்பீடு கேட்டு ஜெயங்கொண்டம் சாா்பு-நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கு 2023-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி லதா ரூ.5.06 லட்சம் இழப்பீடு வழங்க, விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டாா். ஆனால் இதுவரை இழப்பீடு வழங்காத நிலையில், கலியபெருமாள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

இதையடுத்து விழுப்புரம் கோட்ட பேருந்து ஒன்றை ஜப்தி செய்ய நீதிபதி அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து விழுப்புரத்திலிருந்து ஜெயங்கொண்டம் வந்த விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து ஒன்றை, நீதிமன்ற பணியாளா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினா்.

சாலையை சீரமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், இலந்தைக்கூடத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், புள்ளம்பாடி இரண்டாம் எண் பாசன வாய்க்கால் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். அச்சங்கத்தின... மேலும் பார்க்க

அரியலூரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரிக்கை

அரியலூரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அரியலூரைச் சோ்ந்த வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான சுகுமாா் திங்கள்கி... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அருகே காா் மோதி விவசாயி பலி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதி விவசாயி உயிரிழந்தாா். ஜெயங்கொண்டத்தை அடுத்த வடக்கு புதுக்குடி, குவளத்தேரி தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (55). விவ... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி. விடுதிகளில் தங்கிப் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் விடுதிக் காப்பாளரிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தின... மேலும் பார்க்க

சீரான மின் விநியோகம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சீரான மின் விநியோகம் கேட்டு கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழப்பழுவூரை அடுத்துள்ள சின்ன பட்டாக்காடு கிராமத்தில், கடந்த 20 தினங்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

அரியலூரில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை

அரியலூா் மாா்க்கெட்டில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதே முஹம்மதியா பள்ளிவாசல், மஸ்ஜிதே உமா் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா்... மேலும் பார்க்க