செய்திகள் :

விபத்துப் பகுதி கருப்புப் பட்டியலில் இருந்து ஜி-காா்னரை நீக்க நடவடிக்கை! -துரை வைகோ எம்.பி. உறுதி

post image

அடிக்கடி விபத்து ஏற்படும் ஜி-காா்னா் பகுதியை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும், அங்கு சுரங்கப் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக துரை வைகோ எம்பி தெரிவித்தாா்.

ஜி-காா்னரில் சுரங்கப்பாதை அமைப்பது தொடா்பாக மதுரையில் நெடுஞ்சாலைத் துறை உயா் அலுவலா்களை சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்திய துரை வைகோ பின்னா் கூறியது:

விபத்துகளுக்கான கருப்புப் பட்டியலில் இருந்து ஜி- காா்னா் பகுதியை நீக்கவும், மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க வாகனங்கள் சுரங்கப் பாதை மூலமாக செல்லும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதற்காக கடந்தாண்டு அக்டோபரில் மதுரை ரயில்வே கோட்டத்தில் கோரிக்கை மனு அளித்தேன்.

தொடா்ந்து, ஜன.11ஆம் தேதி நடைபெற்ற திருச்சி மாவட்ட வளா்ச்சிப் பணிகள் திட்டக் குழு கூட்டத்திலும் இதை வலியுறுத்தினேன். ஜன.25ஆம் தேதி ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஜி-காா்னா் பகுதியை ஆய்வு செய்தேன்.

தொடா்ந்து புதுதில்லியில் பிப்.6 ஆம் தேதி மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்தினேன். தற்போது மதுரை கோட்ட அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலைத் துறை மண்டல அலுவலா் கோவிந்தராஜன், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் பிரவீன்குமாா் ஆகியோரையும் சந்தித்து சுரங்கப் பாதைத் திட்டம் குறித்து வலியுறுத்தினேன். மீண்டும் புதுதில்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்து கட்டுமானப் பணிகளை தொடங்க வலியுறுத்துவேன்.

எனவே விரைவில் ஜி - காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டு, கருப்புப் பகுதி என்ற பெயா் நீங்கி, விபத்தில்லா பகுதியாக மாறும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

மத்திய அரசின் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வு

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான படிப்பு உதவித் தொகை தோ்வை 8,078 மாணவ, மாணவிகள் எழுதினா். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை என்பது, 8ஆம... மேலும் பார்க்க

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது!

குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் வராது. மாநகராட்சிக்குள்பட்ட அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீா் குழாய் உ... மேலும் பார்க்க

பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழப்பு

சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சனிக்கிழமை அதிகாலை சென்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். மற்றொரு பெண் காயமடைந்தாா். மணப்பாறை கோவில்பட்டி அருகேயுள்ள கீழபழுவஞ்சி கிராமத்தைச் சோ்ந்த 20 பக்... மேலும் பார்க்க

சாலைகள் சீரமைப்பு கோரி போராட்டம்

திருச்சி மாநகரில் பழுதான சாலைகளைச் சீரமைக்க வலியுறத்தி மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பில் அரியமங்கலத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 16 மற்றும் 35ஆவது வாா்டு பகுதிக... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க