விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய விமானப்படையில் இசைக் கலைஞராக பணிபுரிய அக்னி வீரர் வாயு திட்டத்தின்கீழ் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆள்சேர்ப்பு திட்டத்தின் பெயர்: AGNIVEER VAYU INTAKE 01/2026
வயதுவரம்பு: இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க 1.1.2005 முதல் 1.7.2008 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க கர்னாடிக், ஹிந்துஸ்தானி இசைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக் கருவிகளை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆள்சேர்ப்பின்போது - இசைப் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இசைப் படிப்பில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்று இசைத்துறை பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
உடல் தகுதி: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 162 செ.மீ உயரம், நல்ல தெளிவான பார்வைத்திறன் மற்றும் விமானப்படை வீரர்களுக்குரிய உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரம் இருக்க வேண்டும்.
உடல்திறன் தகுதி: ஆண்கள் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை ஏழு நிமிடங்களிலும், பெண்கள் 8 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் Push Ups எடுத்தல், Sit Ups மற்றும் Squat போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப் படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
பணிக் காலங்களில் வழங்கப்படும் சம்பளம் விவரம்:
தேர்வு செய்யப்படுவோருக்கு பணிக் காலங்களில் முதலாம் ஆண்டும் மாதம் ரூ. 30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. ரூ.33,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.36,500, நான்காம் ஆண்டு மாதம் ரூ.40,000 வழங்கப்படும்.
ஆள்சேர்ப்பு நடைபெறும் இடம்: தில்லி மற்றும் பெங்களூருவில் உள்ள விமானப்படை தளங்களில் நடைபெறும்.
மிஸ் பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!
ஆள்சேர்ப்பு நடைபெறும் நாள்: 10.6.2025 - 18.6.2025 .
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நான்கு ஆண்டுகள் இந்திய விமானப்படையில் இசைக் கலைஞர்களாக பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கு விண்ணப்பப் பதிவு 'கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆள்சேர்வு நடைபெறும் நாளில் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.5.2025