செய்திகள் :

விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும்? விவரிக்கும் முன்னாள் விமானி!

post image

ஆமதாபாத் விமான விபத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னாள் விமானி எஹ்சான் காலித் விவரித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளான சாத்தியக்கூறுகள் குறித்து நொய்டாவைச் சேர்ந்த முன்னாள் விமானி எஹ்சான் காலித் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் விவரித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“விமானத் தரவுப் பதிவு, காக்பிட் குரல் பதிவு உள்ளிட்டவரியில் என்ன நடந்திருக்கும் என்பது சரியாகச் சொல்லும். விமானம் பறக்கும்போதே விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளது.

நடுவானில் வெடிப்பு ஏதும் ஏற்படவில்லை. விமானம் மின் இணைப்பை சந்தித்திருக்கிறது. மின் இழப்பு என்ஜின் கோளாறால் இருக்கலாம். ஆனால், இரண்டு என்ஜினும் ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை.

அந்த விமானத்தின் இரண்டு என்ஜின்களும் மிகப்பெரியது. பறவை மோதியதால் கோளாறு ஏற்பட்டு, இரு என்ஜின்களிலும் மின் இழப்பு ஏற்படுவது மிகவும் அரிது.

விமானி மே டே விடுத்துள்ளார். இதன்பொருள், காக்பிட்டில் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. அந்த கோளாறுடன் போராடும்போதுதான் விமானம் தள்ளாடிக் கொண்டே பறந்துள்ளது.

ஆணால், லேண்டிங் கியரை ஏன் உயர்த்தவில்லை எனப் புரியவில்லை. விமானம் பறக்கத் தொடங்கியவுடன் லேண்டிங் கியர் உயர்த்தப்பட வேண்டும். மேலே உயர்த்த முடியவில்லை என்றால், தொழில்நுட்பக் கோளாறு தெரிந்திருக்கும்.

விமானம் 600 அடிக்கு மேல் பறந்துகொண்டிருந்தது. லேண்டிங் கியர் உயர்த்தப்படாததுதான் மிகப்பெரிய கேள்வி. அதுதான் பிரச்னையா? அல்லது பல பிரச்னைகளை விமானிகள் சந்தித்தனரா? என்பது யாராலும் தற்போதைக்கு சொல்ல முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : வெற்றிகரமான மாடல் 787 - 8 ட்ரீம்லைனர் விபத்தில் சிக்கியது எப்படி?

ஒரு நாள்தான்... அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய்

ஒட்டுமொத்த நாடே, விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் வேளையில், தனது மகள் வந்துவிடுவாள் என நம்பிக்கையோடு இருக்கிறார் விமானப் பணிப்பெண் சைனீதாவின் தாய்.ஏர் இந்த... மேலும் பார்க்க

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க