செய்திகள் :

விமானம் மூலம் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தல் - திருச்சியில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்

post image

இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த விமானத்தில் பயணித்து வந்த ஆண் பயணி ஒருவர் தனது உடைமையில் போதை பொருட்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அதனை சோதனை செய்த போது அதில் ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் உயர்ரக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பயணி கடத்தி வந்த உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா

கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 9.9 கிலோ ஆகும். சர்வதேச சந்தையில் அதன் மொத்த மதிப்பு ரூபாய் 10 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி விமான நிலையத்தில் ரூ 10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து திருச்சி வரும் விமானங்களில் இதுபோன்று போதைப் பொருட்கள், தங்கம், சிகரெட், கரன்சிகள் கடத்தி வரப்படுவது தொடர்கதையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது!

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ள 21 வயது இஞ்சினியரிங் மாணவ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கொலை வழக்கு முதல் நில அபகரிப்பு வரை' - கொலையான பாஜக பிரமுகர் ரௌடி உமாசங்கர் பின்னணி

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் தேசிய OBC பிரிவின் செயற்குழு உறுப்பினராக ... மேலும் பார்க்க

Canada: திருவிழா கூட்டத்திற்குள் பாய்ந்த SUV கார்; பலர் பலி, ஏராளமானோர் படுகாயம் - நடந்தது என்ன?

கனடாவின் வான்கூவரில் லாபு லாபு விழா (Lapu Lapu Day street festival) நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது இரவு 8 மணிக்கு மேல், திடீரென கூட்டத்துக்குள் SUV கார் ஒன்று நுழை... மேலும் பார்க்க

திமுக கவுன்சிலரின் கைத்துப்பாக்கியை திருடிய 2 பேர் கைது.. திருச்சி ஹோட்டலில் நடந்தது என்ன?

நகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நகராட்சி கவுன்சில... மேலும் பார்க்க

Pahalgam Attack: பாஜக பிரமுகரின் பெயர், படத்தை இன்ஸ்டாகிராமில் சர்ச்சையாக பதிவிட்ட நபர் கைது

திருச்சி, மாநகர சைபர் கிரைம் தலைமை காவலராக இருப்பவர் ராஜசேகர். இவர், அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல், வள்ளுவர் நகர், ஜின்னா தெருவைச... மேலும் பார்க்க

புதுச்சேரி: சரித்திரப் பதிவேடு குற்றவாளி, பாஜக முன்னாள் இளைஞரணி தலைவர் வெட்டிப் படுகொலை

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த காசிலிங்கத்தின் மகன் உமாசங்கர், பிரபல ரௌடியான இவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர் மீது லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்... மேலும் பார்க்க