செய்திகள் :

விமான நிலையங்களில் இயங்கிவந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து!

post image

இந்திய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவைகளை வழங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்படுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயங்கரவாத்துக்கு எதிரான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி தனது நிலைப்பாட்டை அறிவித்தது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காமின் பைசாரான் பள்ளத்தாக்கில், கடந்த மாதம் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

இந்தக் கொடூர சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தன.

இந்நிலையில், இந்தியாவின் முக்கியமான 9 விமான நிலையங்களில் பயணிகள் சேவைப் பணிகளில் ஈடுபட்டுவந்த துருக்கி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை மத்திய விமான போக்குவரத்துத் துறை ரத்து செய்துள்ளது. நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி, துருக்கியைச் சேர்ந்த செலிபி கிரவுன்ட் ஹேண்டிலிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு துருக்கி மீது மத்திய அரசு எடுத்துள்ள மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும்.

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர்.

இதேபோன்று, துருக்கியில் இருந்து ஆப்பிள் கொள்முதல் செய்வதற்கும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை சிந்து நதி நீர் கிடையாது: ஜெய்சங்கர்

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் ... மேலும் பார்க்க

துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்: மகாராஷ்டிர வா்த்தகா்களுக்கு முதல்வா் பாராட்டு!

துருக்கியில் இருந்து ஆப்பிள், உலா் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வா்த்தகா்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளாா். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆதரவு கருத்து: அஸ்ஸாம் எம்எல்ஏ இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சோ்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் ... மேலும் பார்க்க

18 % மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநா்கள்!

கடந்த 2024-ஆம் ஆண்டில் மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்கு மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது பிஆா்எஸ் சட்டப்பேரவை ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வறிக்கையில் தெர... மேலும் பார்க்க

சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: பிரதமா் மோடி அறிவுறுத்தல்

நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக பி... மேலும் பார்க்க