செய்திகள் :

வியட்நாமை தாக்கிய விபா புயல்: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

post image

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் விபா புயல் இன்று கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வியட்நாமில் விபா புயல் இன்று (ஜூலை 22) காலை 10 மணியளவில் 64-102 கிலோ மீட்டர் (40-63 மைல்) வேகத்தில் காற்றுடன் கரையைக் கடந்தது. மேலும் மணிக்கு 138 கிமீ(86 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக உள்ளூர் வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபா புயல் ஒரே இரவில் பலவீனமடைந்துள்ளது. இருப்பினும் ஹனோயின் கிழக்கே உள்ள ஹங் யென் மாகாணத்தின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காரணமாக தலைநகர் ஹனோயின் வீதிகள் வெறிச்சோடியது.

வடக்கு வியட்நாமில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, துறைமுக நகரமான ஹை போங் மற்றும் குவாங் நின் மாகாணத்தில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 150,000 ஹெக்டேர் (370,000 ஏக்கர்) மீன் வளர்ப்பு பண்ணைகள், 20,000-க்கும் மேற்பட்ட மிதக்கும் மீன் கூண்டுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபா புயல் கனமழை உள்நாட்டிற்குள் நகர்வதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பிலிப்பின்ஸில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசரகால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் மற்றும் 10 மாகாணங்களில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இன்று மூடப்பட்டன,

விபா புயலுக்கு இதுவரை மூன்று பேர் உயிரிழந்தனர். தாழ்வான இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் தண்ணீரில் மூழ்கிய கிராமங்களில் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Tropical Storm Wipha made landfall in northern Vietnam on Tuesday, bringing strong winds and heavy rain to parts of the country's north and central regions.

துருக்கியில் அணுசக்தி பேச்சு

ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கியில் இந்த வாரம் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போா் முடிவுக்கு வந்த பிறகு ஈரான் நடத்தும் முதல் பேச்சு... மேலும் பார்க்க

காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு

காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு

வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ்... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேலுக்குச் சொந்தமான முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (ஜூலை 22) தாக்குதலில் ஈடுபட்டனர். யேமன் நாட்டின் துறைமுகங்களின் மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் ந... மேலும் பார்க்க

தலைப்புச் செய்தியான கோல்ட்பிளே கிஸ் கேமரா விடியோ! ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் வேலை என்ன?

அமெரிக்காவில், கோல்டுபிளே நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஆஸ்ட்ரோனமரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஆன்டி பைரன், மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்டுடன் இருந்தபோது பதிவான விடியோ வைரலான நிலையில்,... மேலும் பார்க்க