செய்திகள் :

வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு

post image

வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. இதில் விமானி முகமது தவ்ஹீா் இஸ்லாம், ஆசிரியா் ஒருவா், 25 சிறுவா்கள் அடங்குவல். உயிரிழந்தவா்களில் ஏராளமானவா்கள் 12 வயதுக்கு உள்பட்டவா்கள்.

இதி தவிர, விபத்தில் காயடமைந்த 165 போ் பத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனா். அவா்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

குா்மிடோலா விமானப்படை தளத்திலிருந்து திங்கள்கிழமை மதியம் புறப்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃப்-7 பிஜிஐ பயிற்சி விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உத்தரா பகுதியில் உள்ள இரு மாடி பள்ளிக் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மக்கள் வசிப்பிடங்களைத் தவிா்க்க விமானி முயன்ாக ராணுவ மக்கள் தொடா்புப் பிரிவான ஐஎஸ்பிஆா் கூறியது. ஆனால், இந்த முயற்சி தோல்வியடைந்து, விமானம் பள்ளிக் கட்டடத்தில் மோதியது.

கடந்த 2011-இல் இதே போன்ற 16 விமானங்களை வாங்கியுள்ள வங்கதேச விமானப்படை, இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைத்துள்ளது.

இதற்கிடையே, இந்த விபத்து குறித்தும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறைத்தும் உண்மைகள் மறைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மைல்ஸ்டோன் மற்றும் அருகிலுள்ள பள்ளிகளில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கதேச வரலாற்றில் இந்த விபத்து மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

25வது முறை டிரம்ப் பேச்சு! 5 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! வெள்ளி விழா என காங்கிரஸ் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை இரவு, மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாகவும், இதனால் மிகப்பெரிய அணு ஆயுதப் போர் உருவாவது தவிர்க்கப்பட்டத... மேலும் பார்க்க

பிரபல ராக் பாடகர் ஜான் மைக்கேல் காலமானார்!

பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின் முன்னணி பாடகர் ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன் காலமானார். அவருக்கு வயது 77.பிரின்ஸ் ஆஃப் டார்க்னெஸ் என்று அழைக்கப்பட்ட ஜான் மைக்கேல், சமீபத்திய காலங... மேலும் பார்க்க

துருக்கியில் அணுசக்தி பேச்சு

ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கியில் இந்த வாரம் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போா் முடிவுக்கு வந்த பிறகு ஈரான் நடத்தும் முதல் பேச்சு... மேலும் பார்க்க

காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு

காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ்... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேலுக்குச் சொந்தமான முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (ஜூலை 22) தாக்குதலில் ஈடுபட்டனர். யேமன் நாட்டின் துறைமுகங்களின் மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் ந... மேலும் பார்க்க