கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை!!
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் ச்ரந்த 4ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடிய நபர் என சந்தேகத்தின் அடிப்படையில், ஒருவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர்தானா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை முதல் தனிப்படை போலீசாரால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் பகுதியில் சேர்ந்த நான்காம் வகுப்பு படித்து வரும் மாணவியை வாயில் துணியை கட்டி கடத்திச் சென்று மாந்தோப்பில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான விவகாரத்தில் 3 டிஎஸ்பிக்கள், ஒன்பது தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.