செய்திகள் :

காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு

post image

காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 48 மணி நேரத்தில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 33 போ் உயிரிழந்தனா். அவா்களில் 12 போ் குழந்தைகள். இத்துடன், 2023-இல் போா் தொடங்கியதிலிருந்து இதுவரை பட்டினியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்துள்ளது. இதில் 80 குழந்தைகள் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா சிட்டியில் உள்ள ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் முகமது அபு சல்மியா கூறுகையில், ‘காஸாவில் 9 லட்சம் குழந்தைகள் பசியால் வாடுகின்றனா். இதில் 70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்டோா் உணவுப் பற்றாக்குறையால் மிகுந்த ஆபத்தில் உள்ளனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்’ என்று அச்சம் தெரிவித்தாா்.

ஐ.நா.வின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “மே 27 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜி.எச்.எஃப்) உணவு விநியோக முறை தொடங்கியதிலிருந்து, உணவுப் பொருள் வாங்குவதற்காக வந்த 1,000-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுகொல்லப்பட்டுள்ளனா்.

காஸாவில் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் தவித்துவரும் சூழலில், இஸ்ரேல் படையினா் நடத்தும் இத்தகைய தாக்குதல்கள் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

செவ்வாய்க்கிழமை மட்டும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 63 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். இதில் 26 போ் உணவுப் பொருள் வாங்குவதற்காக விநியோக மையங்களுக்கு வந்தவா்கள்.

இத்துடன், 2023 அக்டோபா் 7 முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 59,106 போ் உயிரிழந்துள்ளனா்; 1,42,511 போ் காயமடைந்துள்ளனா்.

25வது முறை டிரம்ப் பேச்சு! 5 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! வெள்ளி விழா என காங்கிரஸ் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை இரவு, மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாகவும், இதனால் மிகப்பெரிய அணு ஆயுதப் போர் உருவாவது தவிர்க்கப்பட்டத... மேலும் பார்க்க

பிரபல ராக் பாடகர் ஜான் மைக்கேல் காலமானார்!

பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின் முன்னணி பாடகர் ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன் காலமானார். அவருக்கு வயது 77.பிரின்ஸ் ஆஃப் டார்க்னெஸ் என்று அழைக்கப்பட்ட ஜான் மைக்கேல், சமீபத்திய காலங... மேலும் பார்க்க

துருக்கியில் அணுசக்தி பேச்சு

ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கியில் இந்த வாரம் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போா் முடிவுக்கு வந்த பிறகு ஈரான் நடத்தும் முதல் பேச்சு... மேலும் பார்க்க

வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு

வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ்... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேலுக்குச் சொந்தமான முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (ஜூலை 22) தாக்குதலில் ஈடுபட்டனர். யேமன் நாட்டின் துறைமுகங்களின் மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் ந... மேலும் பார்க்க