செய்திகள் :

விராட் கோலி, ரோஹித் சர்மா ரோபோக்கள் அல்ல; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!

post image

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்கள் இருவரும் ஓய்வு முடிவை அறிவித்துவிடலாம் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதையும் படிக்க: ஒரு டெஸ்ட் தொடர் இழப்பு ஒட்டுமொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது: ஷுப்மன் கில்

ரோஹித் சர்மா, விராட் கோலி ரோபோக்கள் அல்ல

ஃபார்மில் இல்லாத காரணத்தால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.

கெவின் பீட்டர்சன் (கோப்புப் படம்)

இது தொடர்பாக விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மீதான விமர்சனங்களில் நியாயம் இல்லை. இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்களை ஓய்வு பெறுங்கள் என எப்படிக் கூற முடியும். அவர்கள் ஃபார்மில் இல்லை என்பது புரிகிறது. ஆனால், அவர்கள் செய்துள்ள சாதனைகள் மிகப் பெரியது. இதுபோன்ற சவால்களை எனது கிரிக்கெட் பயணத்திலும் எதிர்கொண்டேன். இதுபோன்ற விமர்சனங்கள் கண்டிப்பாக இருக்கும்.

இதையும் படிக்க: சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ரோபோக்கள் அல்ல. ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும்போதும், அவர்களால் சதம் விளாச முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அவர்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. அதனால் அவர்கள் மோசமானவர்களாக மாறிவிடுவார்களா? அதனால் அவர்கள் மோசமான கிரிக்கெட் வீரர்கள் ஆகிவிடுவார்களா? கண்டிப்பாக கிடையாது. அவர்களும் மனிதர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள். அவர்கள் கடந்த காலங்களில் விளையாடியபோது உங்களை எவ்வாறு உணர வைத்தார்கள்? அவர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக சிறப்பாக விளையாடினார்கள். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.

ரோஹித், கில் அதிரடி: 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து தொடரை வென்றது இந்தியா!

கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் அதிரடியால் 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றது.இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது ... மேலும் பார்க்க

யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் ப... மேலும் பார்க்க

திமுத் கருணாரத்னேவுக்கு ஐசிசி பாராட்டு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கை வீரர் திமுத் கருணாரத்னேவை ஐசிசி வெகுவாக பாராட்டியுள்ளது.இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் ... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: பென் டக்கெட், ஜோ ரூட் அரைசதம்; இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று (பிப்ரவரி 9) நட... மேலும் பார்க்க

உலகக் கோப்பையைவிட சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது: டெம்பா பவுமா

உலகக் கோப்பைத் தொடரைக் காட்டிலும் சாம்பியன்ஸ் டிராபி மிகவும் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவ... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்காக இங்கிலாந்து அணியில் புதிதாக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடை... மேலும் பார்க்க