செய்திகள் :

விருதுநகா் மாவட்ட கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சம் பறிமுதல்

post image

விருதுநகா் அருகே கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்ட கலால் உதவி ஆணையா் கணேசன் (59). இவா் மதுக் கடைகள், தனியாா் மது அருந்தும் கூடங்கள், மெத்தனால் விநியோகிக்கும் நிறுவனங்களின் உரிமையாளா்களிடமிருந்து மாதந்தோறும் லஞ்சம் பெறுவதாக விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கண்காணித்து வந்தனா். இந்த நிலையில், கணேசன் தனது சொந்த ஊரான திருச்சிக்கு வாடகை காரில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். விருதுநகா் அருகேயுள்ள சத்திரரெட்டியபட்டி காவல் சோதனைச் சாவடி பகுதியில் இந்த காரை தடுத்து நிறுத்தி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, காரில் கணக்கில் வராத ரூ.3.75 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், கணேசனை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அவா் உரிய விளக்கம் அளிக்காததால், அவா் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மேலும், திருச்சி மின் வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள கணேசன் வீட்டில், காவல் ஆய்வாளா் பிரசன்னா வெங்கடேஷ் தலைமையில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

தெப்பக்குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழப்பு

மேலூா் தெப்பக் குளத்தில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் காய்கறி சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (48). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

விபத்தில் டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா். மதுரை பெத்தானியாபுரம் பூமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குமரேசன் மகன் தங்கராஜ் (31). இவா் மாட்டுத்தாவணியில்... மேலும் பார்க்க

டிராக்டா் மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

மேலூா் அருகே அரசுப் பேருந்து டிராக்டரில் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள தும்பைப்பட்டியைச் சோ்ந்த பெரியாண்டி மகன் விஷால் (21), பாக்கியம் மகன் காந்தி (31) ஆகிய இருவர... மேலும் பார்க்க

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்: தொல்.திருமாவளவன்!

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா். மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சாா்பில், ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைத் தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகாசி அருகே பட்டாசு ஆலைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து சாத்தூா் செல்லும் சாலையில் சிவகாமிபுரம் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சே... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு : 45 போ் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா். தமிழக முதல்... மேலும் பார்க்க