Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்த...
விருதுநகா் வெடிவிபத்து: உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு!
விருதுநகா் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகா் மாவட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த சங்கிலி (45) என்பவா் பலத்த காயமடைந்து விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இந்த செய்தியைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா்.