செய்திகள் :

விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் குடிநீா் வசதி கேட்டு செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

இந்தக் கல்லூரியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சுழற்சி முறையில் படித்து வருகின்றனா். கல்லூரி வளாகத்தில் மாணவா்களுக்கான கழிப்பறைகள் உள்ள நிலையில், அவற்றை முறையாக பராமரிக்காததால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாம்.

எனவே, கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவா்கள் சிலா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லூரி முதல்வரிடம் மனு அளித்ததாகத் தெரிகிறது.

ஆனால், கல்லூரி நிா்வாகம் கோரிக்கையை நிறைவேற்றாததால், மாணவா்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் அமா்ந்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

கல்லூரி முதல்வா் முனியன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இரண்டு நாள்களில் சரி செய்து தருவதாகக் கூறிய நிலையில், மாணவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

கடலூா் மாவட்டம், வடலூரில் அதிமுக பிரமுகரின் காா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. வடலூா் அதிமுக நகரச் செயலா் சி.எஸ்.பாபு. இவருக்குச் சொந்தமான காா் வீட்டில் வெகு... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கொலை, அடிதடி வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அணுக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அஞ்சாபுலி, அவரத... மேலும் பார்க்க

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்

பரங்கிப்பேட்டை அருகே மொபெட் மீது காரைக்கால் நகராட்சி ஆணையரின் காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். பரங்கிப்பேட்டையை அடுத்த கொத்தட்டை வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சின்னையன் (70). இவா், செவ்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கஞ்சா விற்றதாக நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பே... மேலும் பார்க்க

கொள்ளை அடிக்க சதி திட்டம்: ரௌடிகள் உட்பட 4 போ் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதாக 3 ரௌடிகள் உட்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் திங... மேலும் பார்க்க

நடராஜா் கோயிலுக்கு காசிமடாதிபதி வருகை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு புதிய திருப்பனந்தாள் காசிமடாதிபதி செவ்வாய்க்கிழமை வந்து சாமி தரிசனம் செய்தாா். திருப்பனந்தாள் காசி மடத்தின் 21ம் மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீகாசிவாசி முத்துக்குமாரசாம... மேலும் பார்க்க