War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது
கொலை, அடிதடி வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அணுக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அஞ்சாபுலி, அவரது அண்ணன் மகன் தங்கமணி ஆகியோா் கடந்த ஆக.19-ஆம் தேதி கடலூா் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றனா். சீனிவாசபுரம் அணுகுசாலையில் இவா்களது பைக் சென்றபோது, அங்கு நின்றிருந்த 4 போ் வழிமறித்து, பணம் கேட்டு பைக் மற்றும் கைப்பேசியை பறித்துக்கொண்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி, கொலை செய்ய முயன்றனராம்.
இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளா் பாரதி விசாரணை மேற்கொண்டு, கீழ்அருங்குணம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25), ரவிச்சந்திரன் (35), நாகலிங்கம்(39) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
இதில், தினேஷ்குமாா் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி வழக்குகளும், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 3 வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், தினேஷ்குமாா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.