குழந்தை கடத்தல் கும்பல் கைது! வாங்கியோர், விற்றோர் விவரங்கள் சேகரிப்பு!!
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது
முன்னீா்பள்ளம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். முன்னீா்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது தருவை பனங்காட்டு பகுதி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மேல இலந்தைகுளத்தை சோ்ந்த செல்லதுரை (19) என்பவரை சோதனை செய்த போது சுமாா் 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிந்து செல்லத்துரையை கைது செய்தனா்.