Ajithkumar: `க்யூட் ஒயிட் சால்ட் பெப்பர் செதுக்கப்பட்ட செல...' - நியூ லுக், நியூ...
வில்லுக்குறியில் மாடுகளை திருடிய இளைஞா் கைது
தக்கலை அருகே வில்லுக்குறியில் 2 பசுக்கள், 7 எருமை கன்றுகளை திருடிச் சென்ற இளைஞரை இரணியல் போலீஸாா் கைது செய்தனா்.
வில்லுக்குறி பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பாகரன்(65). இவா் பசு, எருமை மாடுகள் வளா்த்து பால் வியாபாரம் செய்து வருகிறாா்.
கடந்த வாரம் இவரது 2 பசுக்கள், 7 எருமைகன்களை காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், தெக்கன் தெருவிளையைச் சோ்ந்த தங்கப்பன் மகன் வைகுண்டன் அருள் (30) என்பவா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வைகுண்டன் அருளை கைது செய்து, பசு மற்றும் எருமை கன்றுகளை மீட்டனா்.