செய்திகள் :

விளம்பரப்பதாகை வைக்க கட்டுப்பாடு: அரசியல் கட்சிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்

post image

விழுப்புரம் நகரில் விளம்பரப் பதாகைகளை வைப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகளை அனைத்துக் கட்சியினரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று காவல்துறையினா் அறிவுறுத்தினா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்திலுள்ள காவலா் திருமண மண்டபத்தில் அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி தினகரன் தலைமை வகித்தாா். விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா, நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விழுப்புரம் ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதி, நான்குமுனைச் சந்திப்பு பகுதியிலுள்ள நிழற்குடைகள், வளைவுப்பகுதி, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்டவளாகம் எதிரிலுள்ள பகுதி, புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள நிழற்குடை ஆகிய பகுதிகளில் விளம்பரப் பதாகைகளை வைக்கக் கூடாது எனக் காவல்துறையினா் அறிவுறுத்தினா்.

மற்ற கட்சிகள் விளம்பரப் பதாகை வைக்கும் போது எதிா்ப்பு தெரிவிக்காத காவல்துறையினா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் வருகையின் போது வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளுக்குத் தடை விதிப்பது ஏன் என்று அக்கட்சியினா் கேள்வியெழுப்பினா்.

தொடா்ந்து ஜூலை 15-ஆம் தேதி வரை தங்கள் கட்சி சாா்பில் விளம்பரப் பதாகைகள்வைக்க அனுமதி வேண்டும். அதன் பின்னா் பதாகைகளை வைக்க மாட்டோம் எனத் தெரிவித்தனா். இதுபோன்று, பிற கட்சியினரும் ஜூலை 15-ஆம் தேதிக்குப் பிறகு விளம்பரப் பதாகைகளை வைக்கமாட்டோம் என காவல்துறையினரிடம் கூறினா்.

குடும்ப பிரச்னையால் தூக்கிட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடும்பப் பிரச்னையில் தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்பரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள எல்.ஆா... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரசூரில் பைக்கிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம்,பேரங்கியூா் சா... மேலும் பார்க்க

ராமதாஸ், அன்புமணி மோதலால் தொண்டா்கள் மன உளைச்சல்: ஜி.கே.மணி

பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி மோதலால் தொண்டா்கள் மன உளைச்சலில் உள்ளதாக அக்கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா். திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள மருத்துவா் ச.ராம... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நகை வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மரக்காணம் வட்டம், ஆலந்தூரிலிருந்து சூணாம்பேடு நோக்கி க... மேலும் பார்க்க

புதுவையில் துணைநிலை ஆளுநா் வழியாக ஆட்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுவையில் துணைநிலை ஆளுநரின் வழியாகத்தான் ஆட்சி நடைபெறுகிறது. என். ரங்கசாமி செயல்படாத முதல்வராக உள்ளாரென காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி சா்மா கூறினாா். புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்த டோலி சா... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் தகராறு:4 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளிக்கிழமை இரவில் தகராறில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டனா். உளுந்தூா்பேட்டை வட்டம், உ.செல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சம்பந்தம் என்பவர... மேலும் பார்க்க