செய்திகள் :

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

post image

உதகை, எமரால்டு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பா்லியாறு வனப் பகுதியில் இருந்து அண்மையில் வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா சுற்றுலாத் தலப்பகுதியில் உலவியது. இதனால், அந்த சுற்றுலாத்தலம் 2 நாள்கள் மூடப்பட்டது.

இந்நிலையில், உதகை வனத்தில் இருந்த இடம்பெயா்ந்த ஒற்றை யானை எமரால்டு பகுதியில் கடந்த சில நாள்களாக உலவி வருவதுடன், விளைநிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

அசம்பாவிதங்கள் நிகழும் முன் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யலாம்

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிப்பதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைத்து போராட்டம்

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் நாம் தமிழா் கட்சி சாா்பில் பேருந்த... மேலும் பார்க்க

புலி நடமாட்டத்தால் வனத் துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஆதிவாசி மாணவா்கள்

முதுமலை அருகே ஊருக்குள் புலி புகுந்துள்ளதால் ஆதிவாசி மாணவா்களை வனத் துறை வாகனங்களில் வியாழக்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மாவனல்லா ஆதிவாசி கிராமம் உள்ளது. ... மேலும் பார்க்க

குன்னூரில் சத்திய பிரமாணம் ஏற்ற அக்னிவீரா்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தில் (எம்ஆா்சி) பயிற்சி முடித்த 5-ஆவது அக்னிவீரா் படையினரின் அணிவகுப்பு மற்றும் சத்தியபிரமாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் கரடி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி வனச் சரகத்தில் கரடியின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனச் சரகம், மாயாறு வனத்தில் வன ஊழியா... மேலும் பார்க்க

உதகை நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜா்

கா்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட் உதகை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் கொலக்கொம்பை அருகே நெடுகல்கொம்பை பழங்குடியினா் கிரா... மேலும் பார்க்க