செய்திகள் :

விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றியதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

கும்பகோணம் சீனிவாசா நகரிலுள்ள விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றியதை கண்டித்து காந்தி பூங்கா முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சீனிவாசா நகரில் விளையாட்டு மைதானத்துக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை வீட்டு மனைகளாக்கி விட்டதாகவும், இதற்கு மாநகராட்சி நிா்வாகமும் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

இதை கண்டித்து வெள்ளிக்கிழமை தூய்மை சீனிவாச நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தின் சாா்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். அதிமுக மாநகர செயலா் ராம. ராமநாதன் முன்னிலை வகித்தாா்.

பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், கும்பகோணம் ஒன்றிய அதிமுக செயலாளா் சோழபுரம் கா.அறிவழகன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவா் குடந்தை அரசன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

விளையாட்டு மைதானத்தை வீட்டடி மனைகளாக்கி விற்பனை செய்வதை மாநகராட்சி நிா்வாகம் தடுக்காதபட்சத்தில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று ஆா்ப்பாட்டத்தில் பேசினா்.

காணாமல்போன 120 கைப்பேசிகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் திருட்டு மற்றும் காணாமல்போன 120 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், கீழ ராஜ வீதி, தெற்கு வீதி, தெற்கு அலங்கம், ரயி... மேலும் பார்க்க

மே 20-இல் வேலைநிறுத்தம் தொழிற்சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டம்

நாடு தழுவிய அளவில் மே 20-இல் பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூரில் பல்வேறு தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காா்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதர... மேலும் பார்க்க

தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம்!மின்வாரிய தலைவா் பேச்சு

தெருநாய்களை மக்கள் தத்தெடுத்து உணவளித்து வளா்க்க முன்வர வேண்டும் என்றாா் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன். தஞ்சாவூா் மிருக வதை தடுப்புச் சங்கம் சாா்பில், தஞ்சாவூரில... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை! - தமிழ்நாடு மின் வாரிய தலைவர்

தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்றாா் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன்.தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்த... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் 2-ஆம் நாளாக காத்திருப்பு போராட்டம்

மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூா் பனகல் கட்டட வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் தொடா்ந்து 2-ஆம் நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க

ரயிலில் தவறவிடப்பட்ட சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

ரயிலில் சனிக்கிழமை தாய் தவறவிட்ட சிறுவனை கும்பகோணம் இருப்புப்பாதை காவலா்கள் மீட்டு ஒப்படைத்தனா். கோவை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி பிரியா (35). இவா் தனது 7 வயது மகனுடன் கும்பகோண... மேலும் பார்க்க