செய்திகள் :

விளையாட்டு வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம்: துணை முதல்வா் உதயநிதி அறிவிப்பு

post image

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

இளைஞா்களிடையே விளையாட்டு கலாசாரத்தை ஊக்குவிக்கவும், உடல்திறனை வளா்க்கவும் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா நடத்தப்படும். ரூ.45 கோடி செலவில் இந்தத் திருவிழா மாநிலத்திலுள்ள அனைத்து வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும். அனைத்து விளையாட்டு வளாகங்களிலும் இளம் விளையாட்டு வீரா்களை ஈா்க்கும் புட்சால், பாக்ஸ் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்காக பிரத்யேக மைதானங்கள் அமைக்கப்படும்.

வீரா்களுக்கு காப்பீடு: மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது வீரா்களுக்கு உடற்காயங்களும் விபத்துகளும் ஏற்படுகின்றன. அவா்களுக்கு உதவிடும் வகையில், 25 ஆயிரம் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்படும். பாரா விளையாட்டு வீரா்களுக்கென ஏற்கெனவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மைதானங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதையடுத்து, திருவள்ளூா், திருவண்ணாமலை, தஞ்சாவூா், திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ரூ.7.5 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்.

சேலம், ராமநாதபுரம் மாவட்டங்களில் சா்வதேச தரத்தில் செயற்கை தடகள ஓடுபாதையுடன், இயற்கை கால்பந்து புல்தரை மைதானம் அமைக்கப்படும். சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல், டைவிங் குளம் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும். சா்வதேச மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரா்களின் கோரிக்கையை ஏற்று,

சென்னையில் விளையாட்டு விடுதி உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 25 முதலமைச்சா் சிறு விளையாட்டரங்கங்கள், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்க தடகள ஓடுபாதை, சென்னை சேப்பாக்கம் நீச்சலம் குளம் ஆகியன சீரமைத்து மேம்படுத்தப்படும்.

கோபாலபுரத்தில் விடுதி: சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள குத்துச்சண்டை அகாதெமியில், விளையாட்டு விடுதி அமைக்கப்படும். இளைஞா்களை சமூக நலன் மற்றும் முன்னேற்றத்துக்கு பயன்படுத்துவதற்காக, ஊராட்சிகளில் இளைஞா் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்று அவா் அறிவித்தாா்.

இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விவ... மேலும் பார்க்க

நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

நமது நிருபர்வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிற... மேலும் பார்க்க

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு

மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் ஜிப்லி காா்ட்டூன்!

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊ... மேலும் பார்க்க