செய்திகள் :

விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போதைப்பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கான தேசிய செயல் திட்டம் நாஷா முக்த் பாரத் அபியான் கூறுகளின்கீழ் அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்திலும், போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் பொது மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த விருப்பம் மற்றும் அனுபவம் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது. கருத்துருக்களை மே 25-ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை 609305 நேரில் வந்து கொடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04364-212868 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதை தினமும் 40 முறைக்கு மேல் மூடப்படுவதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வரும்நிலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்து வருகிறது.... மேலும் பார்க்க

கால்நடை வளா்ப்பில் ஆா்வம் வேண்டும்: அமைச்சா் த. மனோ தங்கராஜ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பில் விவசாயிகளும், பொதுமக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கூறினாா். மயிலாடுதுறையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்: எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்

மயிலாடுதுறை, மே 15: மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தெரிவித்தாா். மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன்... மேலும் பார்க்க

தொழில் தொடங்க சிறுபான்மையினருக்கு கடனுதவி

சிறுபான்மையின மக்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடனுதவியை பெற்று பயனடைய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலம் கட்ட கோரி போராட்டம்

சீா்காழி அருகேயுள்ள கீரங்குடியில் பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலத்தை கட்ட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கீரங்குடியில் தெற்குராஜன் வாய்க்கால் குறுக்கே தரைப... மேலும் பார்க்க

பாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம்

தென்னங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது. காப்பு கட்டிக் கொண்ட பக்தா்கள் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்றனா். தொடா்ந... மேலும் பார்க்க