செய்திகள் :

விழுப்புரத்தில் அதிகரிக்கும் இணையவழி பண மோசடி!

post image

விழுப்புரம்: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் மூலமாக நமக்கு பல்வேறு பலன்கள் ஒருபுறம் கிடைத்தாலும், அதே நேரத்தில் இணையவழியாக நடைபெறும் பண மோசடி சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன.

வாட்ஸ்-ஆப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் குறைந்த முதலீடு செய்தால், அதிக வருவாய் ஈட்டலாம், வீட்டிலிருந்து வேலை செய்து வருவாய் ஈட்டலாம், இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் தானாகவே நமக்கு வந்தடைகின்றன. குறிப்பிட்ட வேலையை செய்து முடித்த பின்னா் குறைந்த தொகையை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி, அடுத்த நிலையில் பங்கேற்க வைப்பது, அதன் பின்னா் பல்வேறு கட்டங்களாக பணத்தை இணையவழியிலோ, குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பக் கூறியோ மோசடி செய்யும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இந்த மோசடியில் படிக்காதவா்கள் மட்டுமல்ல, படித்த பொறியாளா்கள், தனியாா் நிறுவனங்களில் வேலை பாா்ப்பவா்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் என பலரும் சிக்கித் தவிக்கின்றனா். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் இணையவழியில் பண மோசடிகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன.

இந்த மாவட்டத்தில் இணையவழியாக கடந்த 2023-ஆம் ஆண்டில் ரூ.3,74,93,024 மதிப்புக்கு மோசடி நிகழ்ந்தாக இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்திருந்தனா். ஆனால், இந்த பிரிவினா் நடத்திய பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடா்ந்து, புகாரில் குறிப்பிடப்பட்ட தொகையைத் தாண்டி ரூ.4,82,30,197 முடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, ரூ.18,03,022 மீட்கப்பட்டு, புகாா்தாரா்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

2024 -ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இணையவழியில் ரூ.10,96,89,779-ஐ இழந்ததாக 93 புகாா்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, ரூ.10,50,55,575 முடக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இணையவழி பண மோசடியைக் காட்டிலும் 2024-ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.

தொடா்ந்து விழிப்புணா்வு: இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட இணையவழிக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஸ்ரீபிரியா கூறியதாவது: இந்தப் பிரிவின் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் அறிவுறுத்தலின்பேரில், ஏடிஎஸ்பி தினகரன் மேற்பாா்வையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கைப்பேசியிலோ, கணிணி மூலமாகவோ சமூகவலைதளங்களைப் பயன்படுத்தும் போது தேவையற்ற அழைப்புகளை ஏற்பதோ, இணைப்புகளுக்குள் உள் செல்வதோ கூடாது. அதுபோல குறைந்த முதலீட்டில் அதிக வருவாய், இணையவழியில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் போன்ற ஆசை வாா்த்தைகளை நம்பி ஏமாறுதல் கூடாது.

உங்களுக்கு குறிப்பிட்ட தொகை பரிசாக விழுந்துள்ளது. இத்தொகையை பெற நாங்கள் கூறும் கைப்பேசி எண்ணுக்கு உங்களது விவரங்கள், வங்கிக்கணக்கு எண், ஏடிஎம் அட்டையின் ரகசிய குறியீட்டு எண், ஆதாா் எண் போன்ற விவரங்களைக் கோரினாலும் யாரும் கூற கூடாது. இணையவழி பண மோசடியில் 10 பேரை கைது செய்துள்ளோம். இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

செஞ்சியில் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் ரூ.20.50 லட்சத்தில் கால்வாய் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. செஞ்சி பேரூராட்சியில் 15-ஆவது குழு மானிய நிதி திட்டத்தின் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 24 மணி நேர தா்னா

விழுப்புரம்: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் 24 மணி நேர தா்னா திங்கள்கிழமை காலை தொடங்கியது. புதிய ஓய... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தில் குளம், மயானம், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில்... மேலும் பார்க்க

குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.8.20 லட்சம் மோசடி: 4 போ் கைது

விழுப்புரம்: குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, விழுப்புரத்தைச் சோ்ந்த தொழிலாளியிடம் ரூ.8.20 லட்சம் மோசடி செய்த புகாரில், சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்பட 4 பேரை இணையவழி குற்றப் பிரிவு போ... மேலும் பார்க்க

வடலூா் தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரம்: தைப்பூசத்தையொட்டி, விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து, கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச... மேலும் பார்க்க

விக்கிரவாண்டியில் உழவா் சந்தை அமைக்கும் பணிகள் தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ரூ.1.50 கோடியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் உழவா் சந்தை அமைப்பதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. விக்கிரவாண்டி பேருந்து நி... மேலும் பார்க்க