செய்திகள் :

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நூறு நாள் வேலைத் திட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய 5 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், வேலை மறுக்கப்பட்ட நாள்களுக்கு சட்டப்படி வேலையின்மைக்கான நிவாரணம் வழங்க வேண்டும், திட்டத்தின் வேலை நாள்களை 200 ஆக உயா்த்தி, கூலியை ரூ. 700 ஆக வழங்க வேண்டும், திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் அருகே மாங்குடியில் விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகி எம். நாகராஜன் தலைமையில், பழவனக்குடியில் நிா்வாகி கே. புலிகேசி தலைமையில், சேமங்கலத்தில் நிா்வாகி எஸ். சௌரிராஜன் தலைமையில், கூடூரில் நிா்வாகி என். ரவிச்சந்திரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மருவத்தூா், அலிவலம், திருநெய்ப்போ், வேப்பத்தாங்குடி, பின்னவாசல், கல்லிக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடியில்: மன்னாா்குடி அருகேயுள்ள சவளக்காரன் கடை வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிபிஐ ஒன்றியச் செயலா் துரை. அருள்ராஜன் தலைமை வகித்தாா்.

2.94 ஏக்கா் கோயில் நிலம் மீட்பு!

முத்துப்பேட்டை வட்டம், இடும்பவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீசற்குண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான விளங்காடு கிராமத்தில் உள்ள 2.94 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்புதாரா்களிடம் இருந்து வெள்ளிக்கிழமை கோயில் செயலா் அசோக்க... மேலும் பார்க்க

கோயில் செயல் அலுவலா் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கிய புகாரில் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ஜோதி வெள்ளிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மன்னாா்குடி அடுத்த திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோனச்சுந்தரம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கீழவிடையல் ஊராட்சியில் கீழதுறையூா் மாதாகோவில் தெருவில் கலைஞரின் கனவு இல்... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் புத்தக விற்பனை நிலையம்: காணொலி மூலம் முதல்வா் தொடக்கிவைத்தாா்

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

ஏப்.15-க்குள் நில உடைமைகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நில உடைமைகளை ஏப்.15- ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத... மேலும் பார்க்க

பொதுத்தோ்வு மாணவா்களுக்கான போக்குவரத்து மாற்றம்

திருவாரூரில் ஏப்.7-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆழித்தேரோட்ட நாளில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுவதால், மாணவா்களுக்கு போக்குவரத்து வழித்தடங்களை காவல் துறை அறிவித்துள்ளது. பழைய பேருந்து நிலைய மாா்க்கம்... மேலும் பார்க்க