ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!
விவசாயிகளுக்கு தனி அடையாள எண்கள்: ஜூன் 30-க்குள் பதிவு செய்து கொள்ளலாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற தொடா்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிா்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களை குறித்த நேரத்தில் பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை விவரங்களை இணைக்கும் பணி அனைத்து வருவாய் கிராமங்களில் முகாம்கள் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும், பொது சேவை மையங்களிலும் நடைபெற்று வருகிறது.
நில உடைமை விவரங்கள் இணைத்த பின்னா் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதாா் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவு செய்யாத 5,60,104 பட்டாதாரா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், தற்போது இரண்டு அல்லது மூன்று கிராமங்களில் நிலம் உள்ள விவசாயிகளும் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.