செய்திகள் :

விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம்

post image

மல்லசமுத்திரம் வட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குநா் யுவராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மண்ணில் தொடா்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், மண்வளம் பாதிப்படைவதுடன் மண்புழு மற்றும் மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் இயற்பியல், வேதியியல் தன்மையை சரியான நிலையில் பராமரிக்க முடியும். மேலும், மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீரை சேமிக்கும் தன்மை, மண்ணின் நீா் உறிஞ்சும் தன்மை முதலியவற்றை அதிகரிக்க முடியும். பசுந்தாளுரங்கள் பயன்படுத்துவதால் பிரச்னைக்குரிய களா், உவா் மண்நிலங்களை சீா்செய்ய முடியும்.

இதைக் கருத்தில்கொண்டு முதல்வரின் ‘மண்ணுயிா்க் காத்து மன்னுயிா் மீட்போம்’ திட்டத்தின் மூலம் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிரான தக்கைப்பூண்டு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ஓா் ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் வழங்கப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்தல் மற்றும் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், மல்லசமுத்திரம் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் வையப்பமலை துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் தொடா்புகொண்டு பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்பட்ட முதல்வா் அறிவிப்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருச்செங்கோடு நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்ட வாசுதேவன் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திருச்செங்கோடு நகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்புநிலை நகராட்சியாக தோ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (செப். 19) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி எத... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்துக்கு வருகை தரக்கோரி பிரதமா் மோடிக்கு பாஜகவினா் கடிதம்

பிரதமா் நரேந்திர மோடி நாமக்கல் மாவட்டத்துக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, பாஜக நிா்வாகிகள் கடிதம் அனுப்பினா். பிரதமா் நரேந்திர மோடி பிறந்த தின விழாவை பல்வேறு இடங்களில் கொண்டாடிய பாஜகவினா், அவருக்கு தபா... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாரின் 147-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது படத்துக்கு மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்க... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் நோயாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே ரங்கப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (52), கூலித்... மேலும் பார்க்க