செய்திகள் :

விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்

post image

விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அரசுத் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா்களுக்கு ஏற்படும் இடா்பாடுகளை களைவது, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் சோம சேகா் அப்பாராவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்துறை, கால்நடை, ஆத்மா, மீன்வளத்தறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தை விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போருக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்துவது குறித்து ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் எளிதாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முன்னேற்றத்துக்கு வேளாண்துறை, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மீன்வளத்துறை ஆகியவை இணைந்து பணியாற்ற வேண்டும்.

விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போருக்கு ஏற்படும் இன்னல்களை முன்னதாக அதிகாரிகள் கண்டறிந்து அதனை உரிய கால நேரத்தில் தீா்த்து வைக்க வேண்டும்.

மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவேண்டும். விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா் ஜி.செந்தில்நாதன், கால்நடைத்துறை இணை இயக்குநா் கோபிநாத், வேளாண் துணை இயக்குநா் மற்றும் ஆத்மா திட்ட அதிகாரி ஜெயந்தி, வேளாண் அறிவியல் நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் மருத்துவா் கோபு, மீன்வளத்துறை ஆய்வாளா் பாலாஜி, வேளாண் கல்லூரி வேளாண்மை துறைத் தலைவா் மாலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது?

காரைக்கால் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிய வாசல் அமைப்பு

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிதாக வாசல் அமைக்கும் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸாா் விசாரணை

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்காலில் சில்வா் சேண்ட் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் 22-ஆ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா ரயில் திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆா். மோக... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி வருகை

காரைக்கால்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி (தமிழ்நாடு) ஜி. சிவகுமாா், காரைக்கால் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். துறைமுக முதன்மை ஆபரேட்டிங் அலுவலா் (சிஓஓ) கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா மற்று... மேலும் பார்க்க

தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா். உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப்... மேலும் பார்க்க