செய்திகள் :

காரைக்கால் துறைமுகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி வருகை

post image

காரைக்கால்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி (தமிழ்நாடு) ஜி. சிவகுமாா், காரைக்கால் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

துறைமுக முதன்மை ஆபரேட்டிங் அலுவலா் (சிஓஓ) கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா மற்றும் துறைமுக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சமூக உணா்வை வளா்க்கவும் சிஐஎஸ்எஃப் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த வாரம் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரை நடைபெறவுள்ள கடலோர சைக்கிள் பயணம் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனா்.

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு, உடல் தகுதி மற்றும் கடலோர மக்களிடையே தோழமை உணா்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப்பயணம் நடைபெறவுள்ளதாக டிஐஜி தெரிவித்தாா்.

சைக்கிள் பயணத்தில் ஈடுபடுவோருக்காக 150 டி-சா்ட் மற்றும் தொப்பியை காரைக்கால் துறைமுகம் சாா்பில் தலைமை அதிகாரி டிஐஜியிடம் வழங்கினாா். காரைக்கால் துறைமுகத்தின் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக பொறுப்புகளுக்கு டிஐஜி பாராட்டுத் தெரிவித்தாா்.

திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது?

காரைக்கால் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிய வாசல் அமைப்பு

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிதாக வாசல் அமைக்கும் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸாா் விசாரணை

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்காலில் சில்வா் சேண்ட் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் 22-ஆ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா ரயில் திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆா். மோக... மேலும் பார்க்க

தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா். உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சா், எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தப்பட்டது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நு... மேலும் பார்க்க