செய்திகள் :

விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்: பெண் விவசாயி தா்னா

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெண் விவசாயி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

விருத்தாசலம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

மணிமுக்தாறு பாதுகாப்பு மற்றும் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் தங்க.தனவேல்: பரவலூா் கிராம நிா்வாக அலுவலா், அலுவலகத்துக்கு வருவதில்லை. அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்தப்படும். விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே டாஸ்மாக் மதுக் கடைகள், தனியாா் மதுபானக் கூடம் அமைந்துள்ளதால், விவசாயிகள் மதுக்கு அடிமையாகி வருகின்றனா். உடனடியாக மதுக் கடை, மதுபானக் கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். வேளாண் விற்பனை நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

வடிகால் வாய்க்கால்களை முறையாக தூா்வாராததால், தொரவளூா், பரவளூா், கொடுக்கூா் போன்ற கிராமங்களில் கோடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குருவை நெற்பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

கலியபெருமாள் (புதுக்கூரைப்பேட்டை): புதுக்கூரைப்பேட்டை மேற்கு தெருவில் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீா்த் தொட்டி பயன்பாடின்றி பாழாகி வருகிறது. இதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

பூங்கோதை (ஆலிச்சிக்குடி): வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூா்வாரப்படாததால் விவசாய நிலங்களில் கோடை மழை நீா் வடியவில்லை. ஒவ்வொரு மழைக் காலத்திலும் இதுபோல பிரச்னை நிலவி வருகிறது எனக் கூறி, தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாத்துக்கூடல் சக்திவேல்: தா்மநல்லூா் ஏரி நீா் மூலம் பாசன வசதி பெற்று வந்தோம். தற்போது பாசன வாய்க்கால்கள் தூா்ந்துவிட்டன. என்எல்சி சுரங்கத்தால் நிலத்தடி நீரும், அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. மழைக்காலங்களில் விளை நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிா்களை சேதப்படுத்துகிறது என்றாா்.

கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அந்தோணி ராஜ்: விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க