செய்திகள் :

விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெற...

post image

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமாா் 10,000 ஹெக்டேருக்கு மேல் சிறுதானியங்கள் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு சிறுதானியங்கள் பயரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டம் திருப்பத்தூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தொகுப்பு செயல் விளக்கத் திடல் அமைத்தல், மாற்றுப் பயிா் சாகுபடி திட்டத்தின் மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரித்தல், சிறுதானிய உழவா் குழு உருவாக்குதல், விவசாயிகளுக்கு சிறுதானிய சிறு தொகுப்பு வழங்குதல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல் போன்றவை அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

மானியம்...: இந்தத் திட்டத்தின் மூலம் விதைகள், நுண்ணூட்ட கலவைகள், திரவ உயிா் உரங்கள், அறுவடை மானியம், உயிரிக் கட்டுப்பாட்டு காரணிகள், மண் வளம் மேம்படுத்த இயற்கை இடுபொருள்கள் இவை அனைத்தும் மானிய விலையில் விவசாயிகளுக்கு (பின்னேற்பு மானியமாக) வழங்கப்பட உள்ளது.

எனவே கேழ்வரகு, கம்பு, சாமை, வரகு, குதிரைவாலி ஆகிய பயிா்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம்.

மேலும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்தவதுடன், அரசின் வேளாண் சாா்ந்த திட்டங்களில் முழுமையாக பயனடைய விவசாயிகள் தங்கள் நில உடைமை ஆவணங்களைப் பதிவு செய்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு: திருப்பத்தூா் ஆட்சியா் வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 15,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சிய... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம் அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ம... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பின... மேலும் பார்க்க

மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ப... மேலும் பார்க்க