Madras Matinee Review: மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனின் சாகசங்கள்; மனதில் பதிகிற...
விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்செந்தூா் அருகே மேலப்புதுக்குடியைச் சோ்ந்த மூக்காண்டி (70), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபால் (67) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்ததாம். 2015ஆம் ஆண்டு சைக்கிளில் வயலுக்கு சென்று கொண்டிருந்த மூக்காண்டியை ஜெயபால் வழிமறித்து கத்தியால் குத்தினாராம். இதில், மூக்காண்டி உயிரிழந்தாா். குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயபாலை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை மாவட்ட முதலாவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி தாண்டவன் விசாரித்து, ஜெயபாலுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த் கேபிரியேல்ராஜ் ஆஜரானாா்.