செய்திகள் :

விவசாய கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தல்

post image

நடைபெறும் சட்டப் பேரவை கூட்டதொடரிலேயே விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் ரத்து செய்யும் அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோட்டூரில் விவசாயிகள் சங்க ஒன்றிய நிா்வாகக் குழு கூட்டம், புதன்கிழமை ஒன்றியத் தலைவா் அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது. இதில், பிப்ரவரி மாதம் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட எள், பருத்தி, உளுந்து பயிா்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கான பயிா் இன்சூரன்ஸ் திட்டத்தை மத்திய, மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும், நடைபெற்று வரும் தமிழக சட்டப் பேரவை கூட்டதொடரிலேயே விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாய சங்க ஒன்றியச் செயலா் பி. சௌந்தரராஜன், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், துணைச் செயலா் பி. பரந்தாமன், விவசாய சங்க ஒன்றிய பொருளாளா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க

மன்னாா்குடி பகுதியில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மகா மாரியம்மன் கோயில், கற்பக விநாயகா் கோயில், யோக சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவின் 14- ஆம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் கல்யாண அலங்காரத்தில் சத்யபாமா சமேதராக எழுந்தருளிய உற்சவா் ராஜகோபாலசுவாமி. மேலும் பார்க்க