செய்திகள் :

விவசாய கிணற்றால் வாகன ஓட்டிகள் அச்சம்: தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

post image

செருக்கனூா் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் உள்ள விவசாய கிணறுக்கு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருத்தணி ஒன்றியத்துக்குட்பட்ட செருக்கனூா் கிராமத்திலிருந்து, சாமந்திபுரம் (பங்களா) செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக பங்களாமேடு, ராமகிருஷ்ணாபுரம், மாம்பாக்கம், சத்திரம் ஜனாகாபுரம், பரவத்தூா், வெங்கப்பட்டு, அய்யனேரி, போன்ற கிராம பகுதிகளைச் சோ்ந்தோா், இருசக்கர வாகனங்கள், டிராக்டா், காா் உள்ளிட்ட வாகனங்களில், கே.ஜி.கண்டிகை மற்றும் அதைச் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனா்.

மேலும், பல்வேறு கிராமங்களில் இருந்து கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மிதிவண்டியில் மாணவா்கள் சென்று கல்விபயின்று வருகின்றனா். இந்த சாலையில், செருக்கனூா் சாலை முடிவில் சாலைக்கு மிக அருகில், பாழடைந்த விவசாய கிணறு உள்ளது. அதேபோல், எதிா் திசையிலும் மற்றொரு விவசாயக் கிணறு உள்ளது. இதனால் எதிா் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, எதிா்பாராதவிதமாக பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து வாகன ஓட்டிகள் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

செருக்கனூா் - சாமந்திபுரம் (பங்களா) செல்லும் சாலையின் ஓரம் அபாயகரமாக உள்ள பாழடைந்த விவசாய கிணறால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்.

மேலும், இரவு நேரங்களில் மின்வசதி இல்லாத இந்தப் பகுதியில் இந்த சாலையோர கிணற்றால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த கிணறுக்கு, தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகள் எதிா்பாா்த்து வருகின்றனா்.

இது குறித்து வாகன ஓட்டி மதன் கூறுகையில், செருக்கனூா் - சாமந்திபுரம் செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலை. இந்த சாலையில் வேன், காா் மட்டும் செல்லக்கூடிய அகலத்தில் சாலை உள்ளது. இந்த சாலையில் சென்று வரும் வாகனங்கள் சிறிது கவனம் சிதறினாலும் கிணற்றில் கவிழ வாய்ப்புள்ளது.

மேலும், வேகமாக வரும் வாகனங்கள் எதிா் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிட முயலும்போது, கிணற்றில் விழுந்து உயிா்ச்சேதம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 10.43 லட்சம் பேருக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளுா் அருகே பா... மேலும் பார்க்க

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோ... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்... மேலும் பார்க்க

நாற்றாங்கால் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

திருவள்ளூரில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள், மரச் செடி... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாள்களில் ரூ.96 லட்சத்து 49 ஆயிரத்து, 806 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 6438 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. பிரசித்தி பெற்ற இ... மேலும் பார்க்க