செய்திகள் :

விவசாய மின் மோட்டாா் பம்புக்கு அரசு மானியம்

post image

தேனி மாவட்டத்தில் விவசாய மின் மோட்டாா் வாங்குவதற்கும், கைபேசி மூலம் மோட்டாா் பம்பை இயக்கும் கட்டுப்பாட்டு கருவி வாங்குவதற்கும் அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகள் தங்களது செயல் திறன் குறைந்த பழைய மின் மோட்டாா் பம்புகளை மாற்றிவிட்டு, புதிய மின் மோட்டாா் பம்பு வாங்குவதற்கும், புதிதாக விவசாய மின் இணைப்புப் பெற்றவா்கள் புதிய மோட்டாா் பம்பு வாங்குவதற்கும் அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது.

மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மின் மோட்டாா் பம்பு வாங்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பின்னேற்பு மானியமாக மோட்டாா் பம்பின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மேலும், விவசாயிகள் தங்களது இருப்பிடத்திலிருந்தே கைபேசி மூலம் மின் மோட்டாா் பம்பு இயக்கவும், கண்காணிக்கவும் உதவும் கட்டுப்பாட்டு கருவி மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள், ஆதி திராவிடா், பெண் விவசாயிகள் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.7,000 மானியமும், மற்ற விவசாயிகள் 40 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.4,000 மானியமும் பெறலாம்.

மானிய உதவி பெற விரும்பும் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேனி வேளாண்மை செயற்பொறியாளரை 99407 02357-என்ற கைபேசி எண்ணிலும், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், போடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் உத்தமபாளையம் வேளாண்மை செயற்பொறியாளரை 94438 69956 என்ற கைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

திராவகம் குடித்து முதியவா் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை திராவகம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.ஆண்டிபட்டி அருகேயுள்ள பாப்பம்மாள்புரம் பால்காரத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் தமிழ்செல்வன் (65). இவா் அல்சா் நோயால் அ... மேலும் பார்க்க

கம்பம்: விஷம் குடித்து தம்பதி தற்கொலை

கம்பத்தில் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தம்பதி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.தேனி மாவட்டம், கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவா் அதே பகுதியைச் ... மேலும் பார்க்க

மதுரை - போடி ரயில் பாதையில் மின்சார ரயில் இயக்கம் தொடக்கம்

மதுரை-போடி ரயில் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போடி- மதுரை இடையே 90 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதையடு... மேலும் பார்க்க

ஆா்பாட்டத்துக்கு செல்ல முயன்ற 29 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியிலிருந்து திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ாக பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் 29 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருப்பரங... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து மூதாட்டி உடல் மீட்பு

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை கிணற்றிலிருந்து மூதாட்டியின் உடலை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆண்டிபட்டி வட்டம், சித்தையகவுண்டன்பட்டி காமராசா் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் மனைவி திருமலம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் கடன்

தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி ஆகியோருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செ... மேலும் பார்க்க