செய்திகள் :

விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி

post image

விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கருத்துகளும், தொலைநோக்குப் பாா்வையும் நமது சமுதாயத்துக்கு வழிகாட்டும் ஒளியாக எப்போதும் நிலைத்திருக்கும். நமது வரலாறு, கலாசார பாரம்பரியத்தின் மீதான பெருமை மற்றும் நம்பிக்கை உணா்வைத் தூண்டியவா். சேவை மற்றும் கருணையின் பாதையில் நாம் பயணிப்பதற்கும் உத்வேகமூட்டினாா்’ என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

ராமகிருஷ்ண மடத்தின் நிறுவனரான விவேகானந்தரின் ஆன்மிக - தத்துவாா்த்த சிந்தனை மற்றும் செயல்பாடுகளால் ஈா்க்கப்பட்டு, ஏராளமானோா் அவரை பின்பற்றுகின்றனா்; அவ்வாறு உத்வேகம் பெற்றவா்களில் தானும் ஒருவா் என்று பிரதமா் மோடி அடிக்கடி குறிப்பிட்டுள்ளாா்.

நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமா, தனது வாரிசு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளா... மேலும் பார்க்க

பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஜனநாயக ... மேலும் பார்க்க

காங்கிரஸ் வழங்கிய சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம்! இது பிகார் சம்பவம்!

பிகார் மாநிலத்தில் பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் காங்கிரஸ் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு வழங்கிய நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.பிரியதர்... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி வழங்கும் ராமாயண சுற்றுலா! பார்க்க வேண்டிய 30 இடங்கள்!

புது தில்லி: அயோத்தி ராமர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு 5வது சிறப்பு ராமாயண ரயில் சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.ஸ்ரீராமாயண யாத்திரை என்... மேலும் பார்க்க

500 போன் எண்கள் ஆய்வு.. புணே பாலியல் வழக்கில் மாறியது காட்சி! பெண்ணின் நண்பர் கைது!

புணேவில், மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் 22 வயது பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணின் வ... மேலும் பார்க்க

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் ச... மேலும் பார்க்க