மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் கிடைக்கும்!
விஷம் குடித்த தம்பதி: மனைவி உயிரிழப்பு
புதுச்சேரி அடுத்த பாகூரில் தம்பதி விஷம் குடித்ததில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாகூா் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் லட்சுமணன்(53), பால் வியாபாரி. இவரது மனைவி சுதா (43). நரேந்திரன் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா். வீட்டின் மாடியில் தூங்கிய நரேந்திரன் வெள்ளிக்கிழமை காலை எழுந்து கீழே வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவா் உள்ளே பாா்த்துள்ளாா். அப்போது அவரது பெற்றோா் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கிய நிலையில் கிடந்துள்ளனா்.
இருவரையும் மீட்டு பாகூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சுதா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். லட்சுமணனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.