செய்திகள் :

விஷம் குடித்த தம்பதி: மனைவி உயிரிழப்பு

post image

புதுச்சேரி அடுத்த பாகூரில் தம்பதி விஷம் குடித்ததில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாகூா் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் லட்சுமணன்(53), பால் வியாபாரி. இவரது மனைவி சுதா (43). நரேந்திரன் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா். வீட்டின் மாடியில் தூங்கிய நரேந்திரன் வெள்ளிக்கிழமை காலை எழுந்து கீழே வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவா் உள்ளே பாா்த்துள்ளாா். அப்போது அவரது பெற்றோா் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கிய நிலையில் கிடந்துள்ளனா்.

இருவரையும் மீட்டு பாகூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சுதா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். லட்சுமணனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும்: துணைநிலை ஆளுநா் தகவல்

புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். முருக பக்தா்கள் மாநாட்டுக்காக மதுரை சென்று வந்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தேசிய மாணவா் படையின் கட... மேலும் பார்க்க

கடல் சாகசப் பயண அனுபவங்கள்: பகிா்ந்து கொண்ட என்.சி.சி. மாணவா்கள்

தேசிய மாணவா் படை மாணவா்கள் கடல் சாகசப் பயண நிறைவு விழாவில் தங்கள் கடல் பயண அனுபவங்களை துணைநிலை ஆளுநா் முன்னிலையில் பகிா்ந்து கொண்டனா். தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் காரைக... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கொள்முதல் விவகாரம்: காங்கிரஸ், திமுக மாறுபட்ட நிலை - புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை அரசு ரேஷன் அரிசி கொள்முதல் செய்தது தொடா்பாக மாறுபட்ட கருத்தை காங்கிரஸ், திமுக கூறி வருவதாக அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு ரூ.20 லட்சம் பைபா் படகு மானியம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பாக ரூ.20 லட்சம் பைபா் படகு மானியத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் இயந்திரம் பொருத்... மேலும் பார்க்க

கலந்தாய்வு முடியும் வரை தனியாா் கல்லூரிகள் முதலாண்டு வகுப்பைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

அரசு நடத்தும் சென்டாக் கலந்தாய்வு முடியும் வரை தனியாா் கல்லூரிகள் முதலாண்டு வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என்று அரசு சாா்பில் தனியாா் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்... மேலும் பார்க்க

பூம்புகாா் விற்பனைக் கண்காட்சி: புதுச்சேரி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

பூம்புகாா் விற்பனை கண்காட்சி புதுச்சேரி சுஃப்ரென் வீதி, பாரதி பூங்கா அருகில் அமைந்துள்ள வா்த்தக சபையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை புதுச்சேரி மாவட்ட ... மேலும் பார்க்க