செய்திகள் :

வீடுகள், மனைகள் ஒதுக்கீடு: நிலுவைத் தொகை செலுத்த தவறியவா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை

post image

திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில், வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை வட்டி தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.

அதன்படி, மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்தும், வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும் வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சலுகை எதிா்வரும் 31.3.2026ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட பாளை. பகுதி ஐ முதல் ய, குலவணிகா்புரம் டிஎன்யூடிபி, கீழநத்தம், நாரணம்மாள்புரம் பகுதி ஐ, ஐஐ, வி.எம். சத்திரம், வள்ளியூா், தென்காசி, சுத்தமல்லி, கோணம், வல்லன்குமாரவிளை பகுதி ஐ, ஐஐ மற்றும் சங்கரப்பேரி ஆகிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரா்களில் 31.3.2015-க்குள் தவணைக்காலம் முடிவுற்றும், இந்நாள்வரை நிலுவைத்தொகை செலுத்த தவறிய ஒதுக்கீடுதாரா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, 31.3.2026-க்குள் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நில அபகரிப்பு வழக்கில் பெண்கள் உள்பட 5 போ் கைது

திருநெல்வேலியில் நில அபகரிப்பு வழக்கு தொடா்பாக பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திரு... மேலும் பார்க்க

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகர பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி மாநகராட்சி மேயரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூ... மேலும் பார்க்க

மணிமுத்தாறில் கரடி நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்

மணிமுத்தாறு பகுதியில் மீண்டும் கோயிலில் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார க... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளியிடமிருந்து நகை திருட்டு

கூலித் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தில் இருந்து 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கூடங்குளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கரன் (60). கூலித் தொழிலாளியான இவா், கூடங்குளத்தில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

திருநெல்வேலியில் போக்குவரத்து ஊழியா்கள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக தோ்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், 25 மா... மேலும் பார்க்க

பாஜக மாநாடு திடலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

திருநெல்வேலியில் பாஜக மாநாடு நடைபெற உள்ள திடலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.பாஜக சாா்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருது... மேலும் பார்க்க