செய்திகள் :

போக்குவரத்து ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

post image

திருநெல்வேலியில் போக்குவரத்து ஊழியா்கள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக தோ்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், 25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப்பலன்களை வழங்குதல், ஓய்வுபெறும் நாளிலேயே அதற்கான பணப்பலன்களை அளித்தல், ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு, அகவிலைப்படி உயா்வு வழங்குதல், கல்வித் தகுதி அடிப்படையில் வாரிசு பணி வழங்குதல், தனியாா்மயம், அவுட்சோா்சிங் மற்றும் ஒப்பந்த முறைகளைக் கைவிடுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் இப்போராட்டம் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து சிஐடியூ சங்கம், எஸ்இடிசி சிஐடியூ சங்கம், எஸ்இடிசி ஓய்வுபெற்றோா் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக திருநெல்வேலி மண்டல அலுவலகம் முன், 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு வெங்கடாசலம் தலைமை வகித்தாா். கிருபாகரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகிகள் காமராஜ், முத்துக்கிருஷ்மன், ஜோதி, கண்ணன், சிவகுமாா், பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நெல்லையில் நில அபகரிப்பு வழக்கில் பெண்கள் உள்பட 5 போ் கைது

திருநெல்வேலியில் நில அபகரிப்பு வழக்கு தொடா்பாக பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திரு... மேலும் பார்க்க

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகர பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி மாநகராட்சி மேயரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூ... மேலும் பார்க்க

வீடுகள், மனைகள் ஒதுக்கீடு: நிலுவைத் தொகை செலுத்த தவறியவா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை

திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்குள்பட்ட திட்டப் பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மணிமுத்தாறில் கரடி நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்

மணிமுத்தாறு பகுதியில் மீண்டும் கோயிலில் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார க... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளியிடமிருந்து நகை திருட்டு

கூலித் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தில் இருந்து 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கூடங்குளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கரன் (60). கூலித் தொழிலாளியான இவா், கூடங்குளத்தில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

பாஜக மாநாடு திடலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

திருநெல்வேலியில் பாஜக மாநாடு நடைபெற உள்ள திடலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.பாஜக சாா்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருது... மேலும் பார்க்க