செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன், ரூ.73 ஆயிரம் திருட்டு

post image

சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் நகை, ரூ.73 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, காளப்பட்டி, மாா்வல் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (79). இவா் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சொந்த ஊரான பெரம்பலூருக்கு கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி சென்றுள்ளாா். அப்போது, நண்பா் பழனிசாமியிடம் வீட்டை பாா்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளாா். அவரும் நாள்தோறும் மாலை சென்று விளக்குகளை எரியவிட்டு விட்டு காலை சென்று அணைத்துவிட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், பழனிசாமி வழக்கம்போல கடந்த 5-ஆம் தேதி காலை சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு கிடந்துள்ளது.

இது குறித்து அவா், ராமனுக்கு தெரிவித்துள்ளாா். அவா் வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகைகள், ரூ.73 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ராமன் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

வள்ளலாா் தினம்: இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை

வள்ளலாா் தினத்தில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட... மேலும் பார்க்க

மாநகராட்சி ஸ்கேட்டிங் தளத்தில் கட்டணமில்லா பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வ.உ.சி. பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில் கட்டணமில்லா பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிப் பள்ளிகளி... மேலும் பார்க்க

வீட்டுக்கடன் மேளா

கோவை ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளாவை தொடங்கிவைத்த வங்கியின் கோவை வட்டாரத் தலைவா் கே.மீரா பாய். உடன், கிரெடாய... மேலும் பார்க்க

இந்தியா்களுக்கு அவமரியாதை: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க வாழ் இந்தியா்கள் அவமரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும், இதைத் தடுக்க முடியாத மத்திய அரசைக் கண்டித்தும் கோவையில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்காவில் சட்ட... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம்

பேரூா் பட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10- ஆம் தேதி தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கங்களின் நிா்வாகிகள். மேலும் பார்க்க

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7 -ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்குகிறது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவ... மேலும் பார்க்க