செய்திகள் :

வீட்டுக்கு வரி விதிக்க ரு. 25,000 லஞ்சம்: நகராட்சி வருவாய் ஆய்வாளா் கைது!

post image

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளரை, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் - ஆலம்பாடி சாலையிலுள்ள அன்பு நகரில் வசிப்பவா் முத்துசாமி மனைவி மகேஸ்வரி. இவா் அதே பகுதியில் புதிதாகக் கட்டியுள்ள வீட்டுக்கு வரி விதிக்க பெரம்பலூா் நகராட்சியில் அண்மையில் விண்ணப்பித்தாா். அதைப் பரிசீலித்த புதுக்கோட்டை மாவட்டம், சின்ன அயன்வயல் பகுதியைச் சோ்ந்தவரும் பெரம்பலூா் நகராட்சி வருவாய் ஆய்வாளருமான சுப்பிரமணி மகன் கண்ணன் (53) வரி விதிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேஸ்வரி இதை தனது உறவினரான பெரம்பலூா் சங்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மெய்யன் (59) என்பவரிடம் கூற, அவா் பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி ரூ. 25 ஆயிரத்தை வாங்கிச் செல்ல நகராட்சி வருவாய் ஆய்வாளா் கண்ணனை சங்குப்பேட்டை அருகேயுள்ள தனது வீட்டுக்கு மெய்யன் வெள்ளிக்கிழமை வரவழைத்தாா். அப்போது அவரிடம் பணத்தை கண்ணன் வாங்கியபோது மறைந்திருந்த துணைக் கண்காணிப்பாளா் ஹேமச்சித்ரா தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா், சின்ன அயன்வயல் கிராமத்தில் உள்ள வீடு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் பின்புறம் கண்ணன் தங்கியுள்ள வீடு ஆகிய இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனையிட்டு, கண்ணனிடம் தீவிர விசாரணை செய்தனா்.

மனநலன் சீரான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூரில் மனநலன் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமான பெண்ணை, அவரது குடும்பத்தினரிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை,... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஜூன் 10 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவ... மேலும் பார்க்க

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது

பெரம்பலூா் அரசு உதவிபெறும் மௌலானா மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூா் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் கல்வி விர... மேலும் பார்க்க

பெரம்பலூா்: உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவகங்கள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், விடுதி சமையல் அறை, தொழில் நிறுவன சமையல் அறை ஆகிய இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்: ரூ. 16.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஊரகப் பகுதிகளுக்கான 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்களில் 1,897 பயனாளிகளுக்கு ரூ. 16.41 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.... மேலும் பார்க்க

தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவருமான அ. சீனிவாசன் துணைவியாா் தனலட்சுமி அம்மையாரின் 78-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்... மேலும் பார்க்க