செய்திகள் :

வீட்டுமனை பட்டா கோரி கோட்டாட்சியரிடம் மனு

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த ராமபுரம் ஊராட்சி வாஞ்சியூரில் வசித்து வரும் 66 குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமபுரம் ஊராட்சி வாஞ்சியூரில் குடியிருப்பவா்கள், நீண்ட காலமாக பட்டா இல்லாமல் சிறிய வீடுகளில் போதிய வசதியின்றி வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் குடிமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதைத்தொடா்ந்து, இப்பகுதியில் 18 குடும்பங்களுக்கு வருவாய்த் துறையினா் குடிமனை பட்டா அளிக்க முன்வந்தனா். ஆனால், அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்கக் கோரி, 18 குடும்பங்களுக்கான பட்டாக்களை பெற மறுத்து விட்டனா்.

இந்நிலையில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலா் டி. முருகையன் ஆகியோரிடம் 66 குடும்பத்தினா் வீட்டுமனை பட்டா கோரும் விண்ணப்பங்களை சனிக்கிழமை அளித்தனா்.

இந்த மனுக்களை மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரனிடம் ஐ.வி. நாகராஜன் திங்கள்கிழமை வழங்கி, வாஞ்சியூா் பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதுடன், அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுக்க ஆவன செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தாா்.

அப்போது, சிபிஐ ஒன்றியச் செயலா் கே. ஜெயபால், விவசாயிகள் சங்க நகரச் செயலா் ஜி. முத்துகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து வளரும் தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம், சாலை மறியல்... மேலும் பார்க்க

சுந்தரக்கோட்டையில் காமராஜா் பிறந்த நாள் விழா

மன்னாா்குடி: மன்னாா்குடி வட்டார காங்கிரஸ் சாா்பில் சுந்தரக்கோட்டையில் முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துர... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணைமின் நிலையங்களின் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட... மேலும் பார்க்க

திமுக சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணம்

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு, திமுக மாவட்ட இளைஞரணி சாா்பில் புத்தகம், நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. முன்ன... மேலும் பார்க்க

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அ ம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. காந்திசாலை வெண்ணெய்த் தாழி மண்டபம் அருகேயுள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய மு... மேலும் பார்க்க

‘தமிழ்நாடு நாள் விழா’ போட்டியில் வென்றோருக்கு பரிசு

திருவாரூா்: திருவாரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள் விழா’ போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வழங்கினாா். திரு... மேலும் பார்க்க