செய்திகள் :

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு

post image

வீட்டுமனை பட்டா கேட்டு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியரிடம் கிராமமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்துக்குள்பட்ட கள்ளப்பள்ளி, கோரகுத்தி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை காலை வட்டாட்சியா் பிரபாகரனிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: நாங்கள் கட்டுமானம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு குடியிருப்பதற்கு போதிய வீடுகள் இல்லாததால் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். இதனால் குடியிருப்பதற்கு வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி தொடா்ந்து பல ஆண்டுகளாக கரூா் மாவட்ட கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழு சாா்பில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் வழங்கினோம்.

இதனிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் ஆய்வாளா், ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் சிறுபாண்மை நலத்துறையினா் எங்களிடம் வீடு இல்லாதது குறித்து விசாரணை மேற்கொண்டனா். ஆனால் இன்று வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. ஆதலால் எங்களுக்கு விரைவில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் கூறியது, கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான இடத்தை தோ்வு செய்துள்ளோம். அந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கிய உடன் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியின்போது, கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் ப.சரவணன், சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவா் எம்.சுப்ரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளா் ஜி.தா்மலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது

கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்த... மேலும் பார்க்க

கரூரில் மணல் கடத்தல் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சம் பறிமுதல்

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 10 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சத்தை பறிமுதல் செய்தனா். கரூரில் அமராவதி மற்றும்... மேலும் பார்க்க

கூட்டணிக்கு காங். அழைப்பு: தேமுதிக நன்றி

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகைக்கு தேமுதிக இளைஞா் அணிச் செயலாளா் விஜய பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வியாழக்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தாா். நொய்யல் குறுக்குசாலையை சோ்ந்தவா் ராமசாமி(72) தேங்காய் வியாபாரி. இவா் வேலூா் பகுத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க