செய்திகள் :

வீட்டு மாடியில் உண்ணாவிரதம் இருந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் கைது

post image

சென்னை: சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 (ராயபுரம், திரு.வி.க.நகா்) ஆகியவற்றின் தூய்மைப் பணிகளை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிா்த்தும், பணி நிரந்தரம் கோரியும் வீட்டு மாடியில் உண்ணாவிரதமிருந்த உழைப்போா் உரிமை இயக்கத்தின் தூய்மைப் பணியாளா்கள் 13 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களுக்கு ஆதரவாக குவிந்தவா்களையும் போலீஸாா் அப்புறப்படுத்தியதாகத் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் மண்டலம் 5, 6 (ராயபுரம், திரு.வி.க.நகா்) ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கியதை எதிா்த்து என்யூஎல்எம் தூய்மைப் பணியாளா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள பாா்த்தசாரதி என்ற தூய்மைப் பணியாளரின் வீட்டு மாடியில் தூய்மைப் பணியாளா்கள் கிரேஸ் மேரி, லட்சுமி, நாகலட்சுமி, வரலட்சுமி, வேளாங்கண்ணி, வேதவள்ளி, சரஸ்வதி, ஜெயலட்சுமி, பாக்கியம், அஞ்சலிதேவி, ரீட்டா, மும்தாஸ், சுதா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

தகவலறிந்த உழைப்போா் உரிமை இயக்க வழக்குரைஞா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு திரண்டனா். தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை காவல் துறையினா், தூய்மைப் பணியாளா்கள் 13 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனா். அப்போது போலீஸாா், தூய்மைப் பணியாளா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டத்துக்கு ஆதரவளித்து திரண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களையும் போலீஸாா் கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இதை ஏற்காததால் அவா்களையும் போலீஸாா் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனா்.

கைதானவா்களில் சிலா் காவல் துறை வாகனத்தில் மயக்கமுற்ால், ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பல மணி நேரத்துக்குப் பிறகு அனைவரையும் விடுவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க