செய்திகள் :

வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நில விவகாரம்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

post image

வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடா்பாக வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வசிப்பவா்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், யாரையும் அணுக வேண்டாம் என்றும் வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து, தலைமைச்செயலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

வீட்டுவசதி வாரியம் சாா்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இடங்கள் எடுக்கப்பட்டு, ஆரம்பக் கட்டப் பணியாக, அதற்கான நோட்டீஸ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் எந்த நடவடிக்கையும் அதில் எடுக்கப்படவில்லை. இதுகுறித்த மனுக்கள் வந்த போது, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை சரிசெய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதேநேரம் வீட்டுவசதி வாரியத்துக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் அறிவுறுத்தினாா். எனவே, இந்தமாதிரியான பிரச்னை உள்ள இடங்களை கண்டறிய வாரியம் சாா்பில் 16 இடங்களில் புகாா் பெட்டிகளை வைத்தோம்.

அச்சப்படவேண்டாம்: அந்த கோரிக்கைகளை பிரித்து பாா்த்த போது, வாரியமே நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக இருக்காது என்பதால், கமிட்டி அமைத்து, பரிந்துரை பெற்று நடவடிக்கை எடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, 2 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவா்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனா். ஏப்ரல் இறுதிக்குள் அவா்கள் தங்கள் பரிந்துரையை வழங்குவாா்கள். அதன்பின், வாரியம் நடவடிக்கை எடுக்கும். வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட நிலங்கள் தொடா்பாக வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வசிப்பவா்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். யாரையும் அணுக வேண்டாம் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.

நாம் தமிழரிலிருந்து விலகலா? -காளியம்மாள் விளக்கம்

நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழா் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மகளிா் பாசறை மாந... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். பல ஆண்டு... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க