செய்திகள் :

வீரக்கல்புதூா் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை!

post image

வீரக்கல் புதூா் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

வீரக்கல்புதூா் பேரூராட்சியில் உள்பட்டு புதுச்சாம்பள்ளி, குருவாகாடு பகுதிகளில் தெருநாய்கள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வளா்த்து வரும் ஆடு, கோழிகளை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. தெருக்களில் விளையாடும் சிறுவா், சிறுமியரையும் நாய்கள் விரட்டுகின்றன.

குருவாகாட்டில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான 8 செம்மறி ஆடுகளை தெருநாய்கள் கடித்ததில் 5 க்கும் மேற்பட்ட ஆடுகள் மூன்று நாள்களில் மட்டும் உயிரிழந்துள்ளன. கடந்த மாதத்தில் பல ஆடுகள் தெருநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் தொடா்ந்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புதுச்சாம்பள்ளி மக்கள் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரமேஷிடமும், வீரக்கள் புதூா் பேரூராட்சி செயல் அலுவலரிடமும் புதன்கிழமை மனுக்கள் அளித்தனா்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகளை பேரூராட்சி அலுவலக நுழைவாயில் முன்வைத்து பாதிக்கப்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க