செய்திகள் :

வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ய வேண்டியதென்ன? ராபின் உத்தப்பா பதில்!

post image

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகள் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஹைதராபாதில் நடைபெற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியைத் தழுவியது.

ராபின் உத்தப்பா சொல்வதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியைத் தழுவிய நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் பயன்படுத்திய யுக்தியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் போட்டிகளின்போது பயன்படுத்த வேண்டும் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பயன்படுத்திய யுக்தியை போட்டிகளின்போதும் செயல்படுத்த வேண்டும். போட்டிகளின்போது என்ன தவறு செய்கிறார்கள் என்பதை அவர்கள் ஆராய வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு வரிசை சற்று பலவீனமாக உள்ளது.

இதையும் படிக்க: சன்ரைசர்ஸ் அணி 300 ரன்கள் குவித்து வரலாறு படைக்குமா?

அவர்களின் பந்துவீச்சு வரிசை சந்தீப் சர்மா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரை மட்டுமே அதிகப்படியாக நம்பியிருக்கிறது. ஜோஃப்ரா ஆர்ச்சர் பல்வேறு காயங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். காயங்களால் பாதிக்கப்படுவது அவரது தன்னம்பிக்கையை குறைக்கும்.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்திருக்க வேண்டும். பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் கடினமாக இருந்ததால், நன்றாக பேட்டிங் செய்துகொண்டிருந்த அவர் பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, அவர் அதனை செய்யவில்லை என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், ரியான் பராக் பேட்டிங்குக்கு வலிமை சேர்த்தாலும், பந்துவீச்சில் அந்த அணி பலவீனமாகவே உள்ளது.

இதையும் படிக்க: சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை: ஷேன் வாட்சன்

ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 76 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

திட்டங்களை தெளிவாக செயல்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; பாராட்டிய நியூசி. வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அதனுடைய திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க

ஒவ்வொரு போட்டியிலும் 1% முன்னேற விரும்புகிறேன்: அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ரஷ்தீப் சிங் சுய விமர்சனத்தை செய்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் 1 சதவிகிதம் முன்னேற வேண்டுமென விரும்புவதாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்... மேலும் பார்க்க

மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!

அறிமுகப் போட்டி என்பதால் மதிய உணவு உண்ணாமலே விளையாடியதாக ஆட்ட நாயகன் விருது வென்ற இளம் மும்பை வீரர் அஸ்வனி குமார் பேசியுள்ளார்.ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயி... மேலும் பார்க்க

மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!

ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 117 என்ற இலக்கினை 12.5 ஓவர்களில் வென்று அசத்தியது. இந்தப் போட்டியில் மும்பை சார்பாக அறிமுகமான அஸ்வினி குமார் 4 விக்கெ... மேலும் பார்க்க

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது. முதலில் கொல்கத்தா 16.2 ஓவா்களில் 116 ரன்களுக்... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்திய... மேலும் பார்க்க