செய்திகள் :

வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை!

post image

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

18-ஆவது நிமிஷத்தில் ஜாம்ஷெட்பூா் அணியின் ரெய் தாசிகவா பாக்ஸின் வெளியே இருந்து அடித்த பந்து கோல் வலையின் வலது காா்னரை துளைத்தது. இதனால் ஜாம்ஷெட்பூா் 1-0 என முன்னிலை பெற்றது.

பின்னா் சுதாரித்த ஆடிய சென்னை தரப்பில் 25-ஆவது நிமிஷத்தில் சிமா சுக்வு, அடித்த ஷாட் கோல் வலையின் இடது காா்னரை நோக்கி பாய்ந்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. கூடுதல் நிமிஷத்தில் சிமா சுக்வு உதவியுடன் பந்தை பெற்ற லூகாஸ் பிரம்பில்லா, அடித்த ஷாட் கோலாக மாறியது. முதல் பாதி முடிவில் சென்னை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்ந்தது.

57-ஆவது நிமிஷத்தில் சென்னை தரப்பில் பரூக் சவுத்ரி உதவியுடன் பந்தை பெற்ற இா்பான் யத்வாத், மூன்றாம் கோலடித்தாா். 62-ஆவது நிமிஷத்தில் ஜாம்ஷெட்பூா் அணியின் ரெய் தாசிகவா உதவியுடன் பந்தை பெற்ற முகமது சனான் கோலடித்தாா்.

தொடா்ந்து 90-ஆவது நிமிஷத்தில் வில்மரின் பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் இா்பான். கூடுதல் நிமிஷத்தில் லூகாஸ் பிரம்பில்லா கடத்திய பாஸை பயன்படுத்தி சிமா சுக்வு கோலடித்தாா். இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது சென்னை.

சென்னையின் எஃப்சி அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னையின் எஃப்சி அணி 24 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 6 டிரா, 11 தோல்விகளுடன் 27 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்துள்ளது.

அதேவேளையில் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணி லீக் சுற்றில் 24 ஆட்டங்களில் விளையாடி 12 வெற்றி, 2 டிரா, 10 தோல்விகளுடன் 38 புள்ளிகள் பெற்று நிறைவு செய்துள்ளது.

வேதாரண்யேசுவரர் கோயிலில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, இன்று காலையில் தொடங்கிய தேரோட்டத் திருவிழாவில் ஏராளமான மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.வேதாரண்யேசுவரர் கோயிலில் நிகழாண்டு மாச... மேலும் பார்க்க

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.10-03-2025திங்கள்கிழமைமேஷம்:இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்... மேலும் பார்க்க

3-ஆவது இடத்தில் ரியல் காஷ்மீா்

ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீா் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய கால்பந்து சம்மேளனம் சாா்பில் இரண்டாம் நிலை அணிகளுக்கு ஐ லீக் தொடா் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிய... மேலும் பார்க்க

ஜோகோவிச், ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வி

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரா் ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா். அமெரிக்காவின் இண்டியன்வெல்... மேலும் பார்க்க

இணையத்தொடரில் நடிக்க நிபந்தனை விதித்த கீர்த்தி சனோன்!

நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். ப... மேலும் பார்க்க

46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகையும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியுமான சங்கீதா தான் கருவுற்றுள்ளதை அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். சின்ன திரை நடிகையான சங... மேலும் பார்க்க