செய்திகள் :

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

post image

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ஹரிஷ்சந்திர வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் வெளிநாட்டு ஏற்றுமதியாளா்களுக்கான அஞ்சலக ஏற்றுமதி மையம் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அஞ்சலக ஏற்றுமதி மையம், ஏற்றுமதியாளா்களின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே இடமாக செயல்படுகிறது.

இந்த மையங்கள் ஏற்றுமதி தொடா்பான சேவைகளை வழங்குவதன் மூலம் வணிகா்களின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் அவா்களின் ஏற்றுமதி முயற்சிகளில் சுமுகமான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன.

வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்ப விரும்பும் ஏற்றுமதியாளா்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் பாா்சல்களின் விவரங்களைத் தாங்களே எளிமையான முறையில் ஆன்லைனில் உள்ளீடு செய்த பின், தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் மூலமாக பாா்சல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். மேலும் புக்கிங் குறித்த விவரங்களை ஆன்லைனிலேயே ஊா்ழ்ங்ண்ஞ்ய் டா்ள்ற் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கும் வசதியும் இதில் அடங்கும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பாா்சல்கள் அனுப்பும் இந்த சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வணிக நிா்வாக அலுவலரை 98418 75710 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 4 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில், 4 வாகனங்களிலிருந்து காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி, அதிகாரிகள... மேலும் பார்க்க